Friday, August 23, 2013

மேட்டருக்கு அடுத்து என்ன வரும்….?

இந்த தலைப்பில் இருக்கும் கேள்விக்கு பலரின் பதில் குழந்தை என்பதாக இருக்கும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை அதுவே. செக்ஸ் (அ) பால் என்றால் புணர்ச்சி என்று மட்டும் நினைப்பது நம் சமூகம் சார்ந்த உளவியல் குறைபாடு என்றும் கூறுவேன். இப்போது அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 

இயற்கையின் இலக்குகளில் இனப்பெருக்கமும் ஒன்று. சிறப்பான, தரமான, நோய் நொடியின்றி எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் திறன் மிக்க உயிரினத்தை உருவாக்குவதே அதன் குறிக்கோள். இந்த இலக்குகளை அடைய இயற்கை பலப்பல போர்த்தந்திரங்களைக் கையாளுகிறது. அவற்றில் காதலும் ஒன்று. 

''இரண்டு உதடுகள்
  அதிர்ந்தன
  ஓரே சொல்லை உச்சரிக்க..'
- இறையன்பு.

காதல் போதை என்பதுதான் என்ன? காதல் வயப்பட்டவர்களின் கண்கள் சந்திப்பு, புன்னகை, விரல்களின் உரசல். உடலின் மணம் போண்றவை அவர்களுடைய மூளையில் ஒரு வெள்ளப்பெருக்கையே கிளப்பிவிடுகிறது. அந்த வெள்ளத்தில் ஆம்பிடமின் (Amphetamine) போன்ற

1.டோபமின்(Dopamine)
2.நார் எபிநெப்ரின்(Nor Ephinephrine)
3.ரினைல் எத்தலையின்(PEA)

முதலான வேதிகள்(ஹார்மோன்கள்) ரத்த நாடிகளிலும், நரம்புகளிலும் பிரவேசிக்கின்றன.இதனால்
1.இதயம் வேகமாக துடிக்கிறது.
2.முகம் சிவக்கிறது.
3.உள்ளங்கை வியர்க்கிறது.
4.மூச்சுத் திணறுகிறது.
5.தொண்டை அடைக்கிறது.
6.நாக்கு வறள்கிறது.
7.இவ்வளவு இன்ப துன்பங்களோடு கூடவே களிப்பு உல்லாசமும் ஆனந்த பரவசமும் உற்சாகமும் வெளிப்படுகிறது. 

இதே பின்னால் எத்திலமினின் சுரப்பி கணவன்-மனைவி தொடர்பில் 3-4 ஆண்டுகளுக்கு பிறகு குறைகிறது. முன் தந்த அளவு போதையையும் உண்டாக்குவதில்லை. இப்படி வேதிகளின் விளைவுகள் குறைவதால் மோகம் மழுங்குகிறது. மணமுறிவுகள் பிரிவுகள் இக்கால கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால் உடலாலும் மனதாலும் முதிர்ச்சியடைந்து தம்பதியனர் உள்ளார்ந்த குணநலன்களுக்காக காதலிக்கத் தொடங்குகின்றனர். இது முதிர்ச்சியுற்ற காதல். இது பரிவு, பாசம் இவற்றின் அடிப்படையில் உண்டாகிறது.

மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் தங்கள் இனத்தை தற்காத்துக்கொள்ள, பழுகி பெருக்கிக்கொள்ள மேற்கொள்ளும் அற்புதமான இயற்கை நிகழ்வுதான் கலவி. மேலே நான் சொன்ன மேட்டர்.

"நாம் சில நொடிகளில் ஆபாசமாக நினைத்து கேளி செய்துவிடும் அந்த பால் மற்றும் பால் சார்நத நிகழ்வுகள் உடலியலில் எத்தனை பெரிய அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்படும் சிறிய அறிவியல் பதிவு."

துாரத்தில் ஜவுலி கடை பொம்மையை எத்தியேட்சமாய் பாத்ததும் கண்கள் விரித்து உற்று பார்பதில் ஆரம்பித்து, பெண் என நினைத்து பேக் ஐடிக்கு ஹாய் மெசேஜ் அனுப்புவதுவரை அனைத்திற்கும் அவரவர் உடலில் சுரக்கும் பால் வேதிகள்(ஹார்மோன்கள்) தான் காரணம் இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த ஹார்மோன் துாண்டலின் அடுத்தபடி காதல். காதலர்களுக்கு மட்டும் தான் இந்த ஹார்மோன் செயல்பாடு இருக்கும் என்பதில்லை இல்லை. வெளியுர் சென்றிருக்கும் கணவனிடம் போனில் எப்போ வருவீங்க என்று ஆர்வமாய் கேட்கும் மனைவியிடம் ஆரம்பித்து, ஐ மிஸ் யு டி பொண்டாட்டி என்று உருகும் கணவன் வரை ஹார்மோன்கள் செயல்பாடு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. 

"உயிரியலின் படி, "மனித வளர்ச்சி கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது,"  இந்த கருத்தரிப்பினை குறிக்கோளாகக்கொண்டே ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடில்லாமல் ஹார்மோன்கள் பல்வேறு ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. "

         புணர்ச்சியின் போது ஒரு பெண்ணும் ஆணும் தத்தம் 23 கிரோமோஸோம்களின் இணைப்பை தமது இனப்பெருக்க செல்களின் இணைப்பின் மூலம் நிகழ்த்துகின்றனர். ஒரு பெண்ணின் இனப்பெருக்க செல் பொதுவாக "கரு முட்டை" எனப்படுகிறது ஆனால் இதற்கான சரியான உயிரியல் சொல் ஊஸைட்(Oocyte) என்பதாகும். அதுபோலவே, ஒரு ஆணின் இனப்பெருக்க செல் பொதுவாக "விந்து" எனப்படுகிறது ஆனால் இதன் உயிரியல் பெயர் ஸ்பர்மடோஸூன் என்பதாகும்.  ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து ஊஸைட் வெளியாகும் நிகழ்வு ஓவ்யுலேஷன்(Ovulation) எனப்படுகிறது, ஊஸைட்டும் ஸ்பர்மடோஸூனும் கர்ப்பப்பையின் குழாய் ஒன்றினுள் இணைகின்றன. இக்குழாய்கள் பொதுவாக ஃபாலோப்பியன் குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருப்பையின் குழாய்கள் ஒரு பெண்ணின் கருப்பைக்கும் அவளது கர்பப்பைக்கும் இணைப்பு ஏற்படுத்துகின்றன. இந்நிகழ்வின் மூலம் உருவாகும் ஒற்றை உயிரணு கரு ஸைகோட்(Zygote) எனப்படுகிறது, இதன் பொருள் "இணைக்கப்பட்டது" என்பதாகும். ஸைகோட்டின் 46 கிரோமோஸோம்கள் ஒரு மனிதனின் மரபணு விவரணத்தின் தனிப்பட்ட முதற் பதிப்பாகிறது. இது இறுக்கிச் சுற்றப்பட்ட அணு மூலக்கூறான டி.என்.ஏ-வில் பதிந்துள்ளது. இவை முழு உடல் வளர்ச்சிக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளன.



டி.என்.ஏ அணுக்கள் ஒரு திரிக்கப்பட்ட ஏணியைப் போன்று காணப்பட்டு இரட்டை ஹெலிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏணியின் படிகள் இரட்டை அணுக்களாலோ, அல்லது குவனைன், ஸைடோஸைன், அடினைன், தைமின் போன்ற தளப்பொருட்களாலோ ஆனவை. குவனைன் ஸைடோஸைனுடன் மட்டுமே இணையும், அடினைன் தைமினுடன் மட்டுமே இணையும். ஒவ்வொரு மனித செல்லும் ஏறத்தாழ 3 பில்லியன் இது போன்ற தளஜதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு செல்லில் உள்ள டி.என்.ஏ-வும் அநேக தகவல்களை அடக்கியுள்ளது இதனை சொற்களால் வர்ணிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தளத்தின் முதல் எழுத்தைப் பட்டியலிடவே 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்கள் தேவை!  ஒரு முனையிலிருந்து மறு முனைவரை, ஒரு செல்லிலுள்ள டி.என்.ஏ-வின் நீளம் 3 1/3 அடி அல்லது 1 மீட்டர் ஆகும். 

ஒரு மனித உடலிலுள்ள 100 ட்ரில்லியன் செல்களிலுள்ள அனைத்து டி.என்.ஏ-க்களையும் விரித்தால், அதன் நீளம் 63 பில்லியன் மைல்களாகும். இது பூமியிலிருந்து சூரியனுக்கு 340 முறைகள் சென்று திரும்பும் தூரம் ஆகும். கருத்தரித்த 24-லிருந்து 30 மணி நேரத்துக்குள், ஸைகோட்டின் முதல் செல் பிளவு முடிகிறது. மைட்டாஸிஸ் என்ற இந்த செய்கையின் மூலம், ஒரு செல் இரண்டாக, இரண்டு நான்காக என இவ்வகையில் பல்கிப் பெருகுகிறது. 
கருத்தரித்த 24-லிலிருந்து 48 மணி நேரத்திற்குள்,  இயர்லி பிரகனென்சி ஃபேக்டர் (Early pregnancy factor, EPF) எனும் ஹார்மோனை கண்டறிவதன் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.  இது தாயின் குருதியிலுள்ள "தொடக்க கருத்தரித்தல் காட்டி" என்பதாகும். கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் செல்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு மோருலா(morula) எனப்படுகிறது. 

4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு  பிளாஸ்டோசிஸ்ட்(blastosis)  எனப்படுகிறது.  
பிளாஸ்டோசிஸ்டிலுள்ள செல்கள் உள்ளடங்கிய செல் பிண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. உள்ளடங்கிய செல் பிண்டத்திலுள்ள செல்கள் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை ஒவ்வொன்றும் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளை உருவாக்கும் திறமை படைத்தவை. கர்ப்பப்பையின் குழாயினுள் பயணம் செய்யும் ஆரம்ப கால கரு தாயின் கர்பப்பையின் உட்சுவற்றில் தன்னைப் பதித்துக்கொள்கிறது. பதித்தல் என்றழைக்கப்படும் இச்செயல் கருவுற்ற 6-வது நாளில் தொடங்கி 10 முதல் 12 நாட்களில் நிறைவு பெறுகிறது. வளரும் கருவின் செல்கள் வெளிப்படுத்தும் ஒரு ஹார்மோன் மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ எனப்படுகிறது. இது அநேக கருப்பரிசோதனைகளில் கண்டறியப்படுகிறது.ஹெச்.சி.ஜீ தாயின் ஹார்மோன்களை இயக்கி மாதவிடாய் சுழற்சியை இடைமறித்து, கரு வளர்ச்சியை தொடரச் செய்கிறது. பதித்தலைத் தொடர்ந்து, பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் உள்ள செல்கள் பிளாசென்டா என்ற அமைப்பின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இது தாய் மற்றும் கருவின் குருதி ஓட்ட அமைப்புகளை இணைக்கிறது. பிளாசென்டா தாயிடமிருந்து பிராணவாயு, போஷாக்கு, ஹார்மோன்கள், மருந்துகள் ஆகியவற்றை வளரும் குழந்தைக்கு அளிக்கிறது; கழிவுப் பொருட்களை அகற்றுகிறது; தாயின் குருதி கருவின் மற்றும் சிசுவின் குருதியுடன் கலந்துவிடாமல் தடுக்கிறது.  பிளாசென்டா உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் கருவின் மற்றும் சிசுவின் உடல் வெப்ப நிலையை தாயின் உடல் வெப்ப நிலையை விட சற்று அதிகமாக நிலைப்படுத்துகிறது 

பிளாசென்டா வளரும் சிசுவுடன் தொப்புள் கொடியின் மூலம் தொடர்பு கொள்கிறது. பிளாசென்டாவின் உயிர் காக்கும் திறமைகள் நவீன மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளை விடச் சிறந்தவை. ஒரு வாரத்திற்குள், உள்ளடங்கிய பிண்டத்தின் செல்கள் இரண்டு அடுக்குகளை உருவாக்குகின்றன. அவை ஹைப்போபிளாஸ்ட் மற்றும் எப்பிபிளாஸ்ட் எனப்படும்.  ஹைப்பொபிளாஸ்ட் கரு உறையை உருவாக்குகிறது. இதன் மூலம் தாய் போஷாக்கை ஆரம்பகால கருவுக்கு அளிக்கிறாள்.  எப்பிபிளாஸ்டின் செல்கள் ஆம்னியான் என்ற சவ்வை உருவாக்குகின்றன. இதனுள் கருவும் பின்பு சிசுவும் பிறந்து வெளிவரும் வரை வளர்கின்றன. ஏறத்தாழ 2 ½ வாரங்களில், எப்பிபிளாஸ்ட் 3 பிரத்யேக சவ்வுகளை அல்லது கிருமி அடுக்குகளை உருவாக்குகிறது. இவை எக்ட்டோடர்ம், எண்டோடர்ம், மற்றும் மீஸோடர்ம் எனப்படும். 
எக்ட்டோடர்ம் பல்வேறு அமைப்புகளை உருவாக்குகிறது. இதில் மூளை, முதுகுத் தண்டு, நரம்புகள், தோல், நகங்கள், மற்றும் முடி ஆகியவை அடங்கும்.  எண்டோடர்ம் ஸ்வாச அமைப்பின் உட்படையையும் செரிமானப் பாதையையும், மற்றும் முக்கிய உறுப்புகளின் சில பகுதிகளையும் உருவாக்குகிறது. இவ்வுருப்புகள் கல்லீரல், மற்றும் கணையம் ஆகும். 
மீஸோடர்ம் இதயம், சிறுநீரகம், எலும்புகள், குருத்தெலும்பு, தசைகள், இரத்த அணுக்கள், மற்றும் பிற அமைப்புகளை உருவாக்குகின்றன.  3 வாரங்களில் மூளை 3 முக்கிய பகுதிகளாகப் பிரிகிறது. இவை முன்பகுதி, நடுப்பகுதி, மற்றும் பின்பகுதி ஆகும். சுவாசம் மற்றும் செரிமான அமைப்புகளின் வளர்ச்சியும் இப்பொழுது நடைபெறுகிறது.

...தொடரும்-
(தற்போது அறிவியல் தொழில்நுட்பங்கள் வளரந்துவிட்டநிலையில் பட்டிதொட்டியெல்லாம் இணையமும் தொலைத்தொடர்பும் இன்றியமையாததாகிவிட்டது.நமக்கு கிடைத்த தொழில்நுட்பங்களை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில் அந்த சாதனங்களுக்குன்டான, தொழில்நுட்பங்களுக்கு ஈடான பொது அறிவை எந்த அளவிற்கு பெற்றுள்ளோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முகநுால் பயன்படுத்தும் ஒருவருக்கு உலக அறிவு அனைத்துமே தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு பகிர்ந்தால் அது சற்றேனும் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதுநிலை படிப்பில் (Developmental Biology) விரும்பி படித்த பாடம் என்பதாலும் என்பதாலும், நான் தற்போது பணிபுரியும் துறை விலங்கின இனப்பெருக்க உடலியல் (Animal reproductive physiology) என்பதாலும் எனக்கு தெரிந்த விவரங்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். நண்பர்கள் தரும் ஆதரவைப்பொருத்து இதை தொடரலாமா வேண்டாமா என்பதையும் முடிவுசெய்யவிருக்கிறேன்.)

Monday, June 3, 2013



பாச தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!! எம் தலைவரே உங்களை வாழ்த்த இந்த சிறுவனுக்கு வயசு இல்லை... உங்களை வணங்கி கொள்கிறேன்..!! நீண்ட ஆயுளோடும் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாய் 100 வயது வரை சிறப்போடும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும்..!!!



Friday, May 31, 2013


உன் அணைப்புகளுக்கு அடிமைப்பட்டே
அங்கலாய்க்கிறது என் மனம்
தினமும் ஒரு நோய் வந்துவிடாதா என...




“இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது'- படித்ததில் பிடித்தது...!



எப்பொழுதும்  வெட்டியாய் முகநுாலில் உலவிக்கொண்டிருந்த வேளையில் இளைய ஆதினம் என்னும் ஐடியில் இருந்த நண்பர் ஒருவரின் அருமையான பதிவு இது.  செழுமையான தகவல்களுடன் நம்மை சிந்திக்க துாண்டும் பதிவு...!


நன்றி-இளைய ஆதினம்.

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தான் என் முழு நேர சிந்தனை, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது . எளிதாக விளக்க முனைகிறேன், சிறிது கற்பனை குதிரையை தட்டி விட்டால் நீங்களும் வெற்றி பெறலாம்...

வானத்தை தினமும் பார்க்கிறோம், பூமியில் இருந்து மேல் நோக்கி சென்றால் வானத்தை தொட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அது ஒரு 'முடிவில்லாத' வெட்டவெளி (space), சூரியனில் இருந்து வரும் 'ஒளி' சிதறுவதால் மட்டுமே அந்த வெட்ட வெளி நமக்கு நீலமாக (Blue) தெரிகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
பெருவெடிப்பு (Big bang, which is the origin of universe) நடப்பதற்கு முன்னர், "ஏதுமற்ற நிலை" தான் இருந்தது, அதாவது, கண்களை மூடி கொண்டு பார்ப்பதை போல தான்..... 'ஒன்றுமில்லை' என்ற நிலை, வெளி (Space) என்ற ஒன்று கூட கிடையாது (கற்பனை செய்து கொள்ளவும்).

பெருவெடிப்பு நடந்த அந்த நொடி தான் காலத்தின் (Time) ஆரம்பம், ஆற்றலோ அல்லது பருப்பொருளோ (Energy or mass, since both are inter-related) வெடித்து சிதறியது தான் அந்த நிகழ்வு. இது வரை அனைவரும் அறிந்தது தான், ஆனால், உங்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன், வெடித்து சிதறிய தூசுகள் (அணுக்களின் கூட்டம்) சீரான இடைவெளியில் (equal distance) பரவி இருந்திருந்தால் இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்காது.
வெடித்து சிதறிய தூசுகள் 'ஒழுங்கற்ற' நிலையில் (dis-ordered state) சிதறியதால் மட்டுமே இப்பிரபஞ்சம் உருவாகியது..

காரணம்... இந்த வெட்ட வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. தூசுகள் (அணுக்களின் கூட்டம் ) , சீரான இடைவெளியில் பரவி இருந்தால், ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காது, இந்த பிரபஞ்சமும் உருவாகி இருக்காது...நீங்களுமில்லை.. நானுமில்லை. நான் சொல்ல வருவது ஒன்று தான், ஒழுங்கற்ற நிலை தான் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால், கடவுளிற்கு இங்கு என்ன வேலை ??. 'ஆற்றல்' என்று நாம் விஞ்ஞானத்தில் வருவிக்கப்பட்டது (Derived) தான் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???. கடவுள் என்ற கோட்பாடை நாம் ஏன் கொலை செய்கிறோம் ??.
ஆனால், அனைவராலும் தடுக்க முடியாத கேள்வி. அதெப்படி ஏதுமற்ற ஒன்றில் இருந்து ப்ரபஞ்சம் உருவாகியது ??
இதற்கும் பதில் வைதிருக்கிறது அறிவியல்..

இயற்பியலில் சிறிது பின்னோக்கி நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். நியூட்டனின் கணிப்பு படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் கனகச்சிதமாக தங்களின் பாதைகளில் சுழன்று கொண்டு இருக்கின்றன, சுழன்று கொண்டு தான் இருக்கும். ஆனால், காலபோக்கில் விஞ்ஞானத்தின் பிடியில் நியூட்டனின் கணிப்பு பொய்த்தது. அது வரை இருந்த அறிவியலின் பார்வை மாறியது. 'classical physics' என்று அது வரை இருந்த தத்துவங்களுக்கு பெயர் வைத்து மூடிவிட்டார்கள்.

அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது, உதாரணம், சூரியனை பூமி சுற்றுகிறது, ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளி சிறிது சிறிதாக கூடிகொண்டே போகிறது. இந்த விலகல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எது வரை தொடருமென்றால் ஒவ்வொரு அணுவும் தனித் தனியாக பிரிந்து அழிந்து போகும் வரையில். இறுதியில், ஏதுமற்ற நிலை என்று ஆரம்ப நிலைக்கே இந்த பிரபஞ்சம் சென்று விடும் என்பது அறிவியலின் கருத்து. இது நியூட்டன் அறிந்திராதது.

விரிவாக தெரிந்து கொள்ள பிக் ரிப் (Big Rip) என்று விக்கிபீடியாவில் தட்டவும். உயிரினங்கள் மட்டுமே இறந்து போகும் என்று நினைக்காதீர்கள், இந்த பிரபஞ்சமே ஒரு நாள் இறந்து போகும். அறிவியலின் கணக்குகளை வைத்து எப்பொழுது அழிந்து போகும் என்று கூட கண்டுபிடித்து விட்டார்கள். 'Quantum physics' என்று இயற்பியல் பிரிந்த பொழுதில் தான் கடவுளை பற்றிய கேள்வி எழுந்தது. (இங்கு அதை நான் விளக்கவில்லை)
இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுடன், டார்வினின் தத்துவங்களை பொருத்தி பார்த்தால் கடவுளை ஓரளவுக்கு தொட்டு விடலாம். தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காலப்போக்கில், தன் உடலை மாற்றி கொள்ளும் திறமை ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது என்பது தான் டார்வினின் கண்டுபிடிப்பு.

எனது தாழ்மையான கருத்து என்ன வென்றால்.. தனகென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நாம் வாழ சில உயிரினங்களை கொல்வது (தாவரங்கள் மற்றும் சிக்கன்கள்) எதனாலென்றால், நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த கொலைகளை செய்யாமல் நாம் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்...

தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...